ஒரு சிறுகதை மாற்றம்
கொண்டு வருமா….
இதெல்லாம் சாத்தியமா….
ஆம், சாத்தியமே.
இலக்கியத்தின்
பணி அது தானே….
நம் தாய் தமிழின்
அணியும் அதுதானே…..
ஜெயமோகனின் யானை
டாக்டர் சிறுகதை வாசித்த போது எனக்குள் அது எழுப்பிய ஆக்கபூர்வமான தாக்கத்தை எப்படி
பங்கு வைப்பது….. ஒரு சிறுகதைக்கு…. ஏன் ஒலி வடிவம் தரக் கூடாது, என உருவாக்கியதே இவ்
ஒலிச் சந்தி. வாசிப்பனுவத்துக்கு
மேலாக, ஒலி வடிவில் அதே கதை கேட்கும் போது இன்னும் ஆழமாய் ஒரு உணர்வை உண்டாக்க முடியும்
என நம்புவதால் இதோ இம்முயற்சி.
வீட்டின் மடிக்கணினியில், தன்னந்தனியனாய் இப்படைப்பை செய்தேன். எனவே குறைகள் நிறைவாய் இருக்கும்.
பொறுத்தருள்க.
கதை மாந்தர்களின்
சம்பாஷணை வரும் போது, வெறுமனே வாசிக்காமல்… அவர்களே கதா பாத்திமாய் பேசுவது
போல செய்தால் எப்படி என நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமாக பேச என்னிடம் அத்தனை
நண்பர்கள், அல்லது குரல்கள் இல்லை. எனவே நானே மிம்மிக்கிரி செய்து எல்லா குரல்களையும்
உருவாக்கினேன்.
நானே பல குரல்களாய்
இயங்கியது ஒரு காலத்தின் கட்டாயமே அன்றி, வேறொன்றுமில்லை. கருவியாய் நானும் இயங்கியிருக்கிறேன்...
இக்கதையின் அடி நாதமும்….
டாக்டர் கே… பணியாற்றிய மனத்தளமும்…. தங்களை வந்தடைந்தால் மகிழ்வேன்…
யானை டாக்டர் (சிறுகதை - ஒலி வடிவத்தில்) பகுதி - 1
யானை டாக்டர் (சிறுகதை - ஒலி வடிவத்தில்) நிறைவு பகுதி